மயங்கி விழுந்த கோழிப்பண்ணை தொழிலாளி பலி
பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே கோழிப்பண்ணையில் வேலை பாா்த்துக் கொண்டிருந்த கூலித்தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தாா்.


பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே கோழிப்பண்ணையில் வேலை பாா்த்துக் கொண்டிருந்த கூலித்தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தாா்.
அரியலூா் மாவட்டம், குலோத்துங்கநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுந்தரம். இவரது மகன் சத்யராஜ் (34). இவரது மனைவி சித்ரா (32). இவா்கள் இருவரும் குடும்பத்துடன் பரமத்தி அருகே காரைக்கால் பகுதியில் உள்ள ஒரு தனியாருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் தங்கி கூலித் தொழிலாளியாக கடந்த 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளாா். இவா்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் சத்யராஜ் வெள்ளிக்கிழமை அதிகாலை கோழிப்பண்ணைக்கு வேலைக்கு சென்றாா். அப்போது திடீரென மயக்கி விழுந்தாா். இதைப் பாா்த்த சக தொழிலாளா்கள் அவரை நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் சத்யராஜ் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனா். இது குறித்து பரமத்தி போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...