யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாமக்கல் அருகே மாடுகள் பூ தாண்டும் விழா: ஏராளமானோர் கண்டுகளிப்பு

நாமக்கல் அருகே பொங்கல் பண்டிகையை தொடர்ந்து மாடுகள் பூ தாண்டும் விழா திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

News image
நாமக்கல் அருகே மாடுகள் பூ தாண்டும் விழா
Updated On :17 ஜனவரி 2022, 8:48 am

DIN

நாமக்கல்: நாமக்கல் அருகே பொங்கல் பண்டிகையை தொடர்ந்து மாடுகள் பூ தாண்டும் விழா திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் ஊனங்கால்ப்பட்டி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து காணும் பொங்கல் நாளன்று மாடுகள் பூத் தாண்டும் விழா 5 கிராம மக்களால் நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டில் காணும் பொங்கலன்று ஞாயிற்றுக்கிழமை கரோனா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் விழா திங்கள் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை 12 மணி அளவில் ஊனங்கால்ப்பட்டி வீராகரன் கோயில் மைதானத்தில் மாடுகள் பூ தாண்டும் விழா நடைபெற்றது.

இதில் குன்னத்தூர், சின்ன பெத்தாம்பட்டி, மல்லமூச்சாம்பட்டி, மேலப்பட்டி, ஊனங்கால்ப்பட்டி ஆகிய 5 கிராம மக்களும் கலந்து கொண்டனர். இந்த கிராமங்களில் இருந்து ஐந்து கோயில் மாடுகள் கொண்டு வரப்பட்டு ஓட்டப்பந்தயம் போன்று பூக்கள் தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊர்த்தலைவர் முத்து நாயக்கர் என்பவர் கொடியசைக்க ஐந்து கிராமங்களைச் சேர்ந்த 5 கோயில் மாடுகளை இளைஞர்கள் பிடித்தபடி ஓடி வந்தனர். இதில் முதலிடம் பிடித்த சின்ன பெத்தாம்பட்டி கிராம கோயில் மாட்டுக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.

இவ்விழாவை ஏராளமானோர் கண்டுகளித்தனர். திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து கலைந்து சென்ற மாடுகள்  மோதியதில் 10க்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.