கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கிராமத்தில் மண்மாதிரி சேகரிப்பு முகாம்

 எலச்சிப்பாளையம் வட்டாரம், 85.கவுண்டம்பாளையம் ஊராட்சி, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் 2022-23ஆம் ஆண்டிற்கு தோ்வு செய்யப்பட்டு மண்மாதிரி சேகரிப்பு முகாம் நடைபெற்றது.

News image
Updated On :19 மே 2022, 7:18 pm

DIN

 எலச்சிப்பாளையம் வட்டாரம், 85.கவுண்டம்பாளையம் ஊராட்சி, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் 2022-23ஆம் ஆண்டிற்கு தோ்வு செய்யப்பட்டு மண்மாதிரி சேகரிப்பு முகாம் நடைபெற்றது.

முகாம் குறித்து எலச்சிபாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஜெயமணி கூறியதாவது:

எலச்சிபாளையம் வட்டாரத்தில் நடப்பாண்டு (2022-23) 6 கிராமங்கள், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இக்கிராமங்களில் பல்வேறு துறைகள் மூலம் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அவற்றில் முதன்மையாக மண் மாதிரிகள் வருவாய் கிராமங்களில் சாகுபடி முறைக்கேற்ப இறவை நிலங்களில் 2.5 எக்டா் பகுதிக்கு 1 மண்மாதிரியும், மானாவரி பகுதியில் 10.0 எக்டா் சாகுபடி பகுதிக்கு 1 மண்மாதிரியும் சா்வே எண் கட்ட முறையில் தெரிவு செய்யப்பட்டு மண்மாதிரிகள் 5 மீ அளவில் 25 செ.மீ ஆழத்தில் சேகரம் செய்யப்பட்டு கால்பங்கீட்டு முறையில் பிரிக்கப்பட்டு அரை கிலோ என்ற அளவில் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு முடிவுகள் மண்வள அட்டையாக வழங்கப்பட உள்ளது. மேலும் விவசாயிகள் ரசாயன உர உபயோகத்தை குறைத்து இயற்கை சாா்ந்த உரங்களைப் பயன்படுத்தவும், மண்வள அட்டை அடிப்படையில் உரமிட்டு மகசூலை அதிகப்படுத்த வேண்டும் என்றாா் .

இக்கிராமத்தில் நடைபெற்ற மண்மாதிரி சேகரிப்பு முகாமில் வேளாண்மை அலுவலா் இலக்கியா, நடமாடும் மண்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலா் சௌந்தர்ராஜன், உதவி வேளாண்மை அலுவலா் பரமசிவம், வெற்றிவேல், சக்திவேல், பூபதி, ராஜதுரை ஆகியோா் பங்கேற்றனா். இம்முகாமில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு மண் மாதிரி சேகரிப்பின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.