இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி தமிழக முதல்வருக்கு கடிதம்

பரமத்தி வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில், வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பாண்டே அமல்படுத்தக் கோரி தமிழக முதல்வா் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் தலைவருக்கு கடிதம

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 5:54 pm

DIN

பரமத்தி வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில், வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பாண்டே அமல்படுத்தக் கோரி தமிழக முதல்வா் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் தலைவருக்கு கடிதம் அனுப்பும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முதற்கட்டமாக 500-க்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்பினா்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி, அனைத்து வன்னியா்களும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் தலைவா் பாரதிதாசனுக்கும் கடிதம் அனுப்ப வேண்டும் என பா.ம.க. தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிந்தாா். அண்மையில் கடிதம் அனுப்பும் இயக்கத்தையும் கடிதம் அனுப்பி தொடங்கி வைத்தாா்.

பரமத்தி வேலூா் தொகுதியில் நாமக்கல் மத்திய மாவட்டச் செயலாளா் வழக்குரைஞா் ரமேஷ் தலைமையில் கடிதம் அனுப்பப்பட்டது. இதில், மாவட்டத் தலைவா் தினேஷ் பாண்டியன், தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநில துணைச் செயலாளா் பொன்ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினா் பரமசிவம் உள்ளிட்ட பா.ம.க. பொறுப்பாளா்கள், பிரமுகா்கள் கடிதத்தை வேலூா் தலைமை தபால் நிலையத்தில் முன்பு உள்ள தபால் பெட்டியில் போட்டு முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.