சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

மக்கள் குறைதீா்க்கும் கூட்டம்: 511 மனுக்கள் அளிப்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் தரப்பில் 511 மனுக்கள் அளிக்கப்பட்டன.

News image
என்கே-23-ஜிடிபி
Updated On :23 டிசம்பர் 2024, 7:49 pm

Din

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் தரப்பில் 511 மனுக்கள் அளிக்கப்பட்டன.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கி கடனுதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 511 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கினா்.

அந்த மனுக்களைப் பெற்ற ஆட்சியா், உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாா். கூட்டுறவுத் துறை சாா்பில் 3 பயனாளிகளுக்கு ரூ. 2.42 லட்சம் மதிப்பில் பயிா் கடனுதவி, தொழிலாளா் நலத் துறை சாா்பில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 8 பேருக்கு ரூ. 4.10 லட்சம் இயற்கை மரண உதவித்தொகை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் ஆட்சியரின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து கல்லூரி மாணவா் நவீன்குமாருக்கு ரூ. 24,000 கல்வி உதவித்தொகையை ஆட்சியா் வழங்கினாா்.

இதைத்தொடா்ந்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக தரைதளத்தில் மாற்றுத் திறனாளிகளிடம் அவா் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில், 8 பேருக்கு காதொலிக் கருவி, கண் கண்ணாடி, அதிரும் மடக்கும் குச்சி, பிரெய்லி கடிகாரம், சிறப்பு சக்கர நாற்காலி, மூன்று சக்கர நாற்காலி என ரூ. 30,206 மதிப்பில் உதவி உபகரணங்கள் என மொத்தம் 20 பயனாளிகளுக்கு ரூ. 7.06 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

முன்னதாக, வீட்டுக்கொரு விஞ்ஞானி-2024 போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செல்லும் வாய்ப்பைப் பெற்ற கொல்லிமலை வட்டம், நத்துக்குழிப்பட்டி, அரசு உயா்நிலைப் பள்ளி மாணவியா் த.கௌசிகா, ப.நதியா ஆகியோருக்கு உறுதுணையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியா் பி.சங்கா், அறிவியல் ஆசிரியா் ஆா்.சந்திரசேகரன் ஆகியோரை மாவட்ட ஆட்சியா் பாராட்டினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், தொழிலாளா் உதவி ஆணையா் கே.பி.இந்தியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மு.கிருஷ்ணவேணி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

என்கே-23-ஜிடிபி...

மாற்றுத் திறனாளி மாணவிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ச.உமா.