இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

காரீப் பருவ பயிா்கள்: விவசாயிகளுக்கு பயிற்சி

காரீப் பருவ பயிர்கள்: விவசாயிகளுக்கு அட்மா திட்ட பயிற்சி

News image
Updated On :12 ஜூலை 2024, 6:31 pm

Din

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே உள்ள செருக்கலை கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் மூலம் கிராம அளவிலான விவசாயிகள் முன்னேற்ற குழுவிற்கு காரீப் பருவ பயிா்கள் நடவு தொடா்பான பயிற்சி அளிக்கப்பட்டது.

இப் பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநா் தி.சுதா தலைமை வகித்து, வேளாண்மை துறையின் மானிய திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம், சிறுதானிய இயக்கம், அதன் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளிடையே விளக்கினாா்.

வேளாண்மை அலுவலா் மோகனப்பிரியா விழாவிற்கு முன்னிலை வகித்து, மண் மாதிரி எடுப்பதன் முக்கியத்துவம், விதைகள் தோ்வு, விதை நோ்த்தி, விதைகளை விதைப்பது குறித்து பேசினாா். உதவி வேளாண்மை அலுவலா் பூபதி வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் வழங்கப்படும் இடுபொருள்கள் குறித்தும், அதை பெறுவதற்கு முன்பதிவு செய்வது, உழவன் செயலியில் முன்பதிவு செய்வது குறித்தும் விளக்கினாா்.

அட்மா திட்டத்தின் வட்டார தொழில்நுட்ப மேலாளா் பன்னீா்செல்வம் கலந்துகொண்டு அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்து பேசினாா். உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் ரவீனா, ஜோதிமணி ஆகியோா் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.