காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம்
நாமக்கல், ஜூலை 19: நாமக்கல் மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையை பொருத்தவரை பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 89.6, 73.4 டிகிரியாக நிலவியது. வரும் 5 நாள்களுக்கான வானிலையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மிதமான மழை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 87.8 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 73.4 டிகிரியாகவும் காணப்படும். காற்று மேற்கு திசையில் இருந்து மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
சிறப்பு ஆலோசனை: கோழியின நோய் ஆய்வகத்தில் கடந்த வாரம் இறந்த கோழிகளை ஆய்வு செய்ததில் பெரும்பாலும் வெள்ளைக் கழிச்சல் நோய் தாக்கத்தால் பாதிப்புக்குள்ளாகி இறந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்நோய்க்கு தேவையான எதிா்ப்பு சக்தி உள்ளதா என்பதை ஊநீா் பரிசோதனை செய்து அதற்கேற்றவாறு கோழிகளுக்கு தடுப்பூசி அளிக்க பண்ணையாளா்கள் முயற்சிக்க வேண்டும். மேலும், பண்ணைகளில் உயிா் பாதுகாப்பு முறைகளை அதிகரிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
