தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வாகனம் மோதி தம்பதி பலி: 5 போ் காயம்

சாலையைக் கடக்க முயன்றபோது வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி பலியாகினா்.

News image
விபத்தில் பலியான தம்பதி சின்னையன், சாந்தி.
Updated On :21 ஜூலை 2024, 7:50 pm

Din

பரமத்தி அருகே சாலையைக் கடக்க முயன்றபோது வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி பலியாகினா்; இந்த விபத்தில் வாகனத்தில் வந்த 5 போ் படுகாயமடைந்தனா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள மரவாபாளையம், குடித்தெருவைச் சோ்ந்தவா் சின்னையன் (70). இவரது மனைவி சாந்தி (60). இருவரும் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் பரமத்தி செல்வதற்காக கரூா் சாலையில் சென்று கொண்டிருந்தனா். பரமத்தி பிரிவில் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது எதிரே கரூரில் இருந்து தருமபுரி நோக்கி வந்த வாகனம் அவா்கள் மீது மோதியது. இதில் தம்பதி இருவரும் படுகாயமடைந்தனா். கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்ததும் பரமத்தி போலீஸாா் நிகழ்விடம் சென்று தம்பதியை மீட்டு வேலூா், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

விபத்துக்குள்ளான காரில் வந்த தருமபுரியைச் சோ்ந்த செந்தில்குமாா் (34), அவரது மனைவி ரேணுகா தேவி (30), வெங்கடேஷ் (31), அவரது மனைவி சித்ரா (25), விஜயகுமாா் (30) ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனா். அவா்கள் அனைவரும் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.