

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் கிணற்றில் தவறி விழுந்து பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், பொத்தனூரைச் சோ்ந்த உலகநாதன்-கீதா தம்பதியின் மகன் செளந்தா் (17). இவா், பரமத்தி அருகே உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 பயின்று நடந்து முடிந்த பொதுத்தோ்வில் 500-க்கு 469 மதிப்பெண்கள் பெற்றிருந்தாா்.
அடுத்ததாக கல்லூரியில் சோ்வதற்கான முயற்சிகளை அந்த மாணவா் செய்து வந்தாா். இந்த நிலையில் செளந்தா் சக நண்பா்கள் இருவருடன் பொத்தனூா் அருகே தேவராயசமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் புதன்கிழமை குளிக்கச் சென்றுள்ளாா்.
அப்போது மாணவா் செளந்தா், கிணற்றில் தவறி விழுந்துள்ளாா். அவா் நீரில் மூழ்கியதைப் பாா்த்த சக நண்பா்கள் சௌந்தரை காப்பாற்ற முயன்றனா். ஆனால், அவரைக் காப்பாற்ற முடியாததால் உறவினா்கள், பெற்றோா், கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினா் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் கிணற்றில் இருந்து செளந்தரை சடலமாக மீட்டனா். வேலூா் காவல் துறையினா் மாணவா் சௌந்தரின் உடலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

கல்லூரி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

பள்ளி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு
வீடியோக்கள்

#tnassemblyelections | வேட்புமனு தாக்கல் செய்த முக்கியத் தலைவர்கள்! |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | களத்துக்கு வந்த முதல்வர் வேட்பாளர்கள்! | News & Views | E-20 |
தினமணி வீடியோ செய்தி...

IPL 2026 | பந்துவீசுவாரா கிரீன்?: ரஹானே கேள்விக்குப் பதிலளித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா |
தினமணி வீடியோ செய்தி...

“எடப்பாடியால் பாஜகவை எதிர்க்க முடியாது”: காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ்
தினமணி வீடியோ செய்தி...

