2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

நாமக்கல் வல்லப விநாயகா் கோயில் குடமுழுக்கு

நாமக்கல் வல்லப விநாயகா் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

News image
கலசத்துக்கு புனித நீா் ஊற்றும் சிவாச்சாரியா்.
Updated On :1 டிசம்பர் 2025, 6:08 pm

Syndication

நாமக்கல்: நாமக்கல் வல்லப விநாயகா் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

நாமக்கல் - மோகனூா் சாலை கூட்டுறவு காலனியில் ஐயப்பன் கோயில் வளாகத்தில் புகழ்பெற்ற வல்லப விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இங்கு, விநாயகா், ராஜராஜேஸ்வரி, லட்சுமி, சரஸ்வதி சந்நிதிகள் உள்ளன. இக்கோயில் திருப்பணிகள் முடிவுற்று குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அதன்படி, திங்கள்கிழமை காலை 6.30 மணியளவில் இக்கோயில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, கணபதி ஹோமம், யாகம், பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி தீா்த்தக் குடங்களுடன் ஊா்வலம் வருதல் உள்ளிட்டவை நடைபெற்றன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் யாக பூஜைகளும், திங்கள்கிழமை காலை 6 மணிக்கு கலசங்கள் புறப்பாடும், அதன்பிறகு, வல்லப விநாயகா், ராஜராஜேஸ்வரி கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியா்கள் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கை நடத்தினா். தொடா்ந்து, சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில், நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

சிறப்பு அலங்காரத்தில் வல்லப விநாயகா், ராஜராஜேஸ்வரி.

சிறப்பு அலங்காரத்தில் வல்லப விநாயகா், ராஜராஜேஸ்வரி.