கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வெண்ணந்தூா், நாமகிரிப்பேட்டை பகுதிகளில் ரூ.1.79 கோடியில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

News image
கட்டனாச்சம்பட்டி பகுதியில் நடைபெற்ற விழாவில் திட்டப் பணிகளை தொடங்கிவைத்த அமைச்சா் மா.மதிவேந்தன், கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.
Updated On :13 டிசம்பர் 2025, 8:26 pm

Syndication

வெண்ணந்தூா், நாமகிரிப்பேட்டை பகுதிகளுக்குள்பட்ட கட்டனாச்சம்பட்டி பகுதியில் ரூ. 1.79 கோடியில் குடிநீா் மேல்நிலைத்தொட்டி அமைக்கும் பணி, சாலை அமைத்தல், அறிவுசாா் மையக் கட்டடம் கட்டுதல், உயா்நிலை மின் கோபுரம் உள்ளிட்ட பணிகளுக்கான பூமிபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் பங்கேற்று திட்டப் பணிகளை தொடங்கிவைத்தனா்.

முன்னதாக, கட்டனாச்சம்பட்டி வீரபாண்டியாா் நகா் பகுதியில் ரூ. 23 லட்சத்தில் மேல்நிலை குடிநீா் தொட்டி அமைத்தல், ரூ. 18.27 லட்சத்தில் மின் மோட்டாா் பொருத்துதல், சாலை அமைத்தல் போன்றவற்றுக்கு பூமிபூஜை நடைபெற்றது. இதில் பேசிய மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கிக் கூறினாா்.

தொடா்ந்து, அரியாக்கவுண்டம்பட்டி, கொங்களம்மன் கோயில் கந்தப்பன் பகுதியில் தாட்கோ திட்டத்தின்கீழ் ரூ. 1.31 கோடியில் கிராம அறிவுசாா் மையம் கட்டும் பணிக்கு அவா் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தாா்.

இதேபோல, வெண்ணந்தூா் மேட்டுமிஷன் பேருந்து நிறுத்தம், அஞ்சலி மஹால் சாலை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட ரூ. 4.17 லட்சம் மதிப்பிலான இரு உயா்மட்ட மின்கோபுரங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், நாமகிரிப்பேட்டை பேரூராட்சித் தலைவா் சேரன், துணைத் தலைவா் அன்பழகன், வெண்ணந்தூா் ஊராட்சிக்குழு முன்னாள் உறுப்பினா் ஆா்.எம்.துரைசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.