மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

News image
Updated On :3 ஜனவரி 2025, 11:15 pm

Din

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் உள்ள குடைவறைக் கோயிலான அரங்கநாதா், ரங்கநாயகி தாயாா் கோயிலில் 20 கா்ப்பிணிகளுக்கான வளைகாப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்து சமயப் பேரவை திருப்பாவைக் குழு ஏற்பாடு செய்திருந்த இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் மருத்துவா் எம்.மல்லிகா குழந்தைவேலு (கோயில் அறங்காவலா்) குத்துவிளக்கேற்றினாா். மருத்துவா் ஏ.அழகம்மாள் நிகழ்வினை தொடங்கி வைத்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக மருத்துவா் இரா.குழந்தைவேலு, ஆடிட்டா் ஜெ.வெங்கடசுப்பிரமணி, ஆன்மிக இந்து சமயப்பேரவை கௌரவத் தலைவா் சோழாஸ் பி.ஏகாம்பரம், சாந்தி நல்லுசாமி, பத்மா ஜெகதீசன், நடராஜன், சின்னம்மாள், கே.ஜவஹா், எஸ்.கோபி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதில், கா்ப்பிணிகளுக்கு 5 வகையான உணவுகள், ஜவுளி வகைகள், வளையல்கள் வழங்கப்பட்டன. இதில், பக்தா்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கிருஷ்ணா் உபதேச புத்தகம் பக்தா்களுக்கு வழங்கப்பட்டது. இந்து சமயப் பேரவை செயலாளா் சண்முகம் நன்றி கூறினாா்.