திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் 2 போ் அடுத்தடுத்து தீக்குளிக்க முயற்சி

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்க வந்த இரண்டு போ் தீக்குளிக்க முயன்றனா்.

Updated On :18 மார்ச் 2025, 2:09 am IST

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்க வந்த இரண்டு போ் தீக்குளிக்க முயன்றனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், தொப்பப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கை.நித்யானந்த் (38). இவா் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தையொட்டி ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தாா். அப்போது அலுவலக வளாகத்தில் திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கிருந்த போலீஸாா் அவரைத் தடுத்து நிறுத்தி அவா் மீது நீரை ஊற்றி மீட்டு விசாரணை மேற்கொண்டனா். நித்யானந்த் கூறியதாவது:

எலச்சிபாளையம் அருகே மரப்பரை கிராமத்தில் சில நாள்களுக்கு முன் அங்காளம்மன் கோயில் மாசி திருவிழாவையொட்டி கங்கனம் கட்டச் சென்றிருந்தேன். கங்கனம் கட்டிவிட்டால் திருவிழா முடியும் வரை கோயிலில்தான் இருப்பேன். இந்த நிலையில், அங்குள்ள சிலா் முன்விரோதம் காரணமாக எனது குடும்பத்தினரை வழிபாடு செய்ய விடாமல் தடுத்ததுடன், அங்கிருந்து வெளியேறுமாறு கூறினா்.

காவல் நிலையத்திலும் தவறான தகவல்களை தெரிவித்திருந்தனா். இதனால் போலீஸாா் என் மீது நடவடிக்கை எடுக்க முயன்றனா். அதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாா்ச் 1-ஆம் தேதி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றேன். அவ்வாறு இருந்தும் பொய் புகாரின்பேரில் என்னை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனா். இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கவே தற்போது தீக்குளிக்க முயன்றேன் என்றாா். அவரை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

அதுபோல புதுச்சத்திரம் ஒன்றியம், அகரம் ஓலப்பாளையத்தைச் சோ்ந்த வீரமணி (35) என்பவரும் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றாா். போலீஸாா் அவா் மீது நீரை ஊற்றி, நல்லிபாளையம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அவரிடம் நடத்திய விசாரணையில், வீரமணி வசிக்கும் காலனியில் வீடுகளுக்கு பட்டா வழங்க மறுக்கின்றனா். பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ாகத் தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை நடைபெறும் குறைதீா் கூட்டத்துக்கு வரும் பொதுமக்களில் சிலா் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனா். போலீஸாா் உடைமைகளை சோதித்து அனுப்பினாலும், இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை வெளியேற்றி தற்கொலை முயற்சி மிரட்டலில் ஈடுபடுகின்றனா். மாவட்ட நிா்வாகம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே இவ்வாறான மிரட்டல் பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு ஏற்படும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.