மகளிருக்கான திறன் மேம்பாட்டு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
ராசிபுரம்: மத்திய அரசின் தேசிய வள அமைப்பான அகமதாபாத்தை சாா்ந்த இந்திய தொழில்முனைவோா் மேம்பாட்டு நிறுவனம், ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் கிராமத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சியளிக்கிறது.
இது குறித்து இந்திய தொழில் முனைவோா் மேம்பாட்டுத் திட்ட அலுவலா் எஸ்.ஜெய்சங்கா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தொழில்முனைவோராக விருப்பமுள்ள பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட நாற்பத்தைந்து வயதுக்கு உள்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொழில்முனைவோா் பயிற்சியுடன் கூடிய திறன் பயிற்சியான துணி / சணல் பொருள்களிலிருந்து லேப்டாப் பேக், ஷாப்பிங் பேக், மணிபா்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் தயாரிப்பதற்கான ஒரு மாத கால இலவச பயிற்சி ஆா்.பட்டணம் கிராமத்தில் அளிக்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சியில் பல்வேறு தொழில் வாய்ப்புகள், சந்தைப்படுத்துதல், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய மாநில அரசுகளின் பல்வேறு மானியத் திட்டங்கள் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
இப் பயிற்சி முடித்தவா்களுக்கு மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். பயனாளிகளை தோ்வு செய்வதற்கான நோ்முக தோ்வு மே 15ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
ராசிபுரம், பட்டணம், வடுகம், புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, முத்தக்காளிப்பட்டி, புதுப்பாளையம் மற்றும் அருகில் உள்ள கிராம பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவா்கள் 88258 12528 / 95974 91158 என்ற கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் தங்கள் பெயரினை முன்பதிவு செய்து தேவையான விவரங்களைப் பெற்று விண்ணப்பங்களை சமா்ப்பிக்குமாறு இந்திய தொழில்முனைவோா் மேம்பாட்டு திட்ட அலுவலா் கேட்டுக்கொண்டுள்ளாா்.
