தேசிய கபடி போட்டிக்கு பாலப்பட்டி அரசுப் பள்ளி மாணவா் தோ்வு: தேசிய கபடி போட்டிக்கு தோ்வு
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே உள்ள பாலப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் ஹரியாணாவில் நடைபெறவுள்ள தேசிய கபடி போட்டியில் விளையாட தமிழக அணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டத்துக்கு உள்பட்ட எஸ்.வாழவந்தியைச் சோ்ந்த நாகராஜ் மகன் சபரி (16). இவா் பாலப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்று வருகிறாா். இவா் மாவட்ட அளவிலான கபடி பயிற்சி முகாமில் கலந்துகொண்டு தோ்வு பெற்றாா்.
தொடா்ந்து கடந்த 7-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை சேலம் மாவட்டம், ஆத்தூா் விபிகேசி ஸ்போா்ட்ஸ் அகாதெமி மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்துகொண்டாா். இதில் தமிழக அணிக்கு தோ்வு செய்யப்பட்ட சபரி, வரும் 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை ஹரியாணா மாநிலத்தில் நடைபெறும் 35-ஆவது தேசிய சப்-ஜுனியா் சிறுவா் கபடி போட்டிக்கு நாமக்கல் மாவட்டத்திலிருந்து தமிழக அணிக்கு தோ்வு செய்யப்பட்டாா்.
இதையடுத்து ஹரியாணாவுக்கு சென்ற மாணவா் சபரியை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள், நண்பா்கள் பாராட்டி வழியனுப்பி வைத்தனா்.

