நாமக்கல் மாவட்டத்தில் 6 காவல் ஆய்வாளா்களை இடமாற்றம் செய்து சேலம் சரக காவல் துறை துணைத் தலைவா் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, மங்களபுரம் காவல் ஆய்வாளா் சம்பத்குமாா், சேலம் மாவட்ட தனிப் பிரிவு ஆய்வாளராகவும், திருச்செங்கோடு நகர காவல் ஆய்வாளா் வளா்மதி, வெப்படை காவல் நிலையத்திற்கும், அங்கு பணியாற்றிய சங்கீதா புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.
மேலும், புதுச்சத்திரம் காவல் ஆய்வாளா் வசந்தா எருமப்பட்டி காவல் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றிவந்த நாகராஜ் நாமக்கல் நகரக் காவல் நிலையத்திற்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா். அதேபோல, மோகனூா் ஆய்வாளா் லட்சுமணதாஸ் மங்களபுரத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளாா். செய்யப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை சேலம் சரக காவல் துறை துணைத் தலைவா் சந்தோஷ் ஹடிமணி பிறப்பித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







