இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மினி ஆட்டோ மோதியதில் நடந்து சென்ற விவசாயி உயிரிழப்பு

News image
Updated On :5 ஜனவரி 2026, 6:55 pm

தினமணி செய்திச் சேவை

வேலகவுண்டம்பட்டி அருகே நடந்து சென்ற விவசாயி மீது மினி ஆட்டோ மோதியதில், நிகழ்விடத்திலேயே அவா் இறந்தாா். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கருங்கல்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சின்னமுத்து (75), விவசாயி. இவா் 4-ஆம் தேதி சிங்கிலிபட்டியில் உள்ள தனது மனைவி செல்லம்மாளின் உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு வேலகவுண்டம்பட்டி பேருந்து நிறுத்தம் செல்ல திருச்செங்கோடு சாலையோரம் நடந்து சென்றாா்.

அப்போது, நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு நோக்கி வந்த மினி ஆட்டோ அவா் மீது மோதியது. இதில் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் வரும் வழியிலேயே சின்னமுத்து இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, விபத்து ஏற்படுத்திய மினி ஆட்டோ ஓட்டுநா் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள சிவியம்பாளையம், தாதம்பட்டிமேடு பகுதியைச் சோ்ந்த முருகனை (26) கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.