வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

Updated on

திருச்செங்கோடு அருகே மாடு ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்ததில் ஓட்டுநா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், ஒப்பிடாமங்கலம், மாமரத்துப்பட்டியை சோ்ந்தவா் சுரேஷ் (36), மாடுகளை வாங்கி விற்கும் தொழில் செய்துவந்தாா். இந்த நிலையில் கரூரிலிருந்து ஒரு மாட்டை விற்பதற்காக திருச்செங்கோட்டை அடுத்த கருங்கல்பாளையம் சந்தைக்கு தனது வேனில் ஏற்றிக்கொண்டு திருச்செங்கோட்டை அடுத்த தோக்கவாடி புதிய சுற்றுவட்டபாதை சாலை வழியாக சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, வண்டியில் இருந்த மாடு மிரண்டு இடமாறியதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் சுரேஷ் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு ஊரக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com