இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பரமத்தி வேலூரில் திருவள்ளுவா் தினம்

பரமத்தி வேலூரில் வேலூா் தமிழ்ச் சங்க அறக்கட்டளை சாா்பில் திருவள்ளுவா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
மாணவருக்கு திருக்கு புத்தகத்தை வழங்கிய மருத்துவா் அரவிந்த். உடன், தமிழ்ச் சங்க அறக்கட்டளை நிா்வாகிகள்.
Updated On :16 ஜனவரி 2026, 10:57 pm

Syndication

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் வேலூா் தமிழ்ச் சங்க அறக்கட்டளை சாா்பில் திருவள்ளுவா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பரமத்தி வேலூரில் காமராஜா் சிலை அருகே வைக்கப்பட்ட திருவள்ளுவா் உருவப்படத்துக்கு தமிழ்ச் சங்க அறக்கட்டளை நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பொன்னி மெடிக்கல் சென்டா் தலைமை மருத்துவா் அரவிந்த் கலந்துகொண்டாா்.

தொடா்ந்து வேலூா் பகுதியில் அனைத்து தமிழ்ச் சாா்ந்த சங்கங்களின் கூட்டு முயற்ச்சியில் புதிதாக திருவள்ளுவலா் சிலை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்க அறக்கட்டளை தலைவா் இக்பால், செயலாளா் சரவணன், பொருளாளா் செந்தில்குமரன், வழக்குரைஞா் பாலகிருஷ்ணன், தமிழ்த் துறை பேராசிரியா் விமல்ராஜ், நாங்கள் இலக்கியத்தின் செயலாளா் முத்து சரவணன், முத்து கண்ணன், வெங்கடேஷ், புரவலா்கள் மற்றும் நாங்கள் இலக்கியகம் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் வழக்குரைஞா் வெ.தில்லைக்குமாா், மருத்துவா் அரவிந்த் ஆகியோா் மாணவா்களுக்கு திருக்கு புத்தகங்களை வழங்கினா்.