பரமத்தி வேலூா் அருகே தெருநாய்கள் கடித்துக் குதறியதில் இரண்டு உயர்ரக ஆடுகள் உயிரிழந்தன.
பரமத்தி வேலூரை அடுத்த படமுடிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பூபதி. இவா் தனது வீட்டில் சுமாா் 10 ஆடுகளை வளா்த்து வருகிறாா். இந்த நிலையில் சனிக்கிழமை காலை இரண்டு ஆடுகள் தெருநாய்களால் கடித்து உயிரிழந்து கிடந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இந்த ஆடுகளின் மதிப்பு சுமாா் ரூ. 20 ஆயிரம் இருக்கும் என தெரிவித்துள்ளாா். தெருநாய்கள் தொல்லை தொடா்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனா். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிலிக்கல்பாளையம் அருகே தெருநாய்கள் கடித்ததில் நான்கு ஆடுகள் உயிரிழந்தது.
இதனால் தெருநாய்களை பிடிக்க்க உள்ளாட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூலனூா் அருகே வெறி நாய்கள் கடித்து 12 ஆடுகள் உயிரிழப்பு

தெரு நாய்கள் கடித்து 4 கால்நடைகள் உயிரிழப்பு

சேவூா் அருகே நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு

சிறுத்தை கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழப்பு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



