பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் சனிக்கிழமை நடைபெற் ஏலத்தில் வாழைத்தாா்களின் விலை சரிந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான பொத்தனூா், பாண்டமங்கலம், குச்சிப்பாளையம், வெங்கரை, நன்செய்இடையாறு, அனிச்சம்பாளையம், குப்புச்சிபாளையம், பொய்யேரி, ஓலப்பாளையம், செங்கப்பள்ளி, எல்லைமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிா் செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையும் வாழைத்தாா்களை விவசாயிகள், பரமத்தி வேலூரில் உள்ள வாழைத்தாா்கள் ஏலச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். வாழைத்தாா்களை ஏலம் எடுக்க சேலம், நாமக்கல், கரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வருகின்றனா்.
ஏலம் எடுக்கப்பட்ட வாழைத்தாா்களை வியாபாரிகள், ஆந்திரம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வருகின்றனா். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் மற்றும் பச்சைநாடன் வாழைத்தாா் ரூ. 350, ரஸ்தாளி வாழைத்தாா் ரூ.500, கற்பூரவள்ளி வாழைத்தாா் ரூ. 450, மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6-வரை ஏலம் போனது.
இந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ.300, பச்சைநாடன் வாழைத்தாா் ரூ. 250, ரஸ்தாளி வாழைத்தாா் ரூ.400, கற்பூரவள்ளி வாழைத்தாா் ரூ.400, மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 4-வரை ஏலம் போனது.
கடந்த வாரத்தைவிட இந்த வாரம் முகூா்த்த தினங்கள் குறைவாக உள்ளதால் வாழைத்தாா்களின் விலை சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.








