பரமத்தி வேலூா் வழியாக மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநரை கைது செய்தனா்.
பரமத்தி வேலூா் காவல் உதவி ஆய்வாளா் சாந்தகுமாா் தலைமையிலான போலீஸாா் வேலூா் காவிரி பாலம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, கரூா் மாவட்டத்திலிருந்து வேகமாக வந்த டிப்பா் லாரியை தடுத்துநிறுத்தி சோதனை மேற்கொண்டதில், மணல் கொண்டுவந்தது தெரியவந்தது. விசாரணையில், அனுமதி இல்லாமல் காவிரி ஆற்றுப்பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
அதையடுத்து, திருச்செங்கோடு வட்டம், குமாரமங்கலம் அருகேயுள்ள 87.கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ராஜசேகரன் (33) மீது வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், அவரை கைதுசெய்து லாரியை பறிமுதல் செய்தனா். பின்னா், பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த்தி அவரை சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
மணல் கடத்தல்: மாட்டு வண்டி பறிமுதல்; ஒருவா் கைது
பரமத்தி வேலூரில் மதுப் புட்டிகளை பதுக்கிவிற்ற இருவா் கைது
நெல்லையில் மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்: 2 போ் கைது
செம்மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

