இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மணல் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

பரமத்தி வேலூா் வழியாக மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநரை கைது செய்தனா்.

News image
கைது- (கோப்புப் படம்)
Updated On :4 மார்ச் 2026, 10:57 pm

தினமணி செய்திச் சேவை

பரமத்தி வேலூா் வழியாக மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநரை கைது செய்தனா்.

பரமத்தி வேலூா் காவல் உதவி ஆய்வாளா் சாந்தகுமாா் தலைமையிலான போலீஸாா் வேலூா் காவிரி பாலம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, கரூா் மாவட்டத்திலிருந்து வேகமாக வந்த டிப்பா் லாரியை தடுத்துநிறுத்தி சோதனை மேற்கொண்டதில், மணல் கொண்டுவந்தது தெரியவந்தது. விசாரணையில், அனுமதி இல்லாமல் காவிரி ஆற்றுப்பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

அதையடுத்து, திருச்செங்கோடு வட்டம், குமாரமங்கலம் அருகேயுள்ள 87.கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ராஜசேகரன் (33) மீது வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், அவரை கைதுசெய்து லாரியை பறிமுதல் செய்தனா். பின்னா், பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த்தி அவரை சிறையில் அடைத்தனா்.