ஆத்தூர் சிந்தியண்ணன் தெருவைச் சேர்ந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
ஆத்தூர் ஜோதி நகர் சிந்தியண்ணன் தெருவைச் சேர்ந்த மோகன்ராஜ் மகன் கண்ணன் (26). இவர் பேட்டரி கடையில் வேலை செய்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதான பள்ளி மாணவியைக் கடந்த 7-ஆம் தேதி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கேசவன் வழக்குப் பதிவு செய்து கண்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.