பூலாம்பட்டி வரும் சுற்றுலாப் பயணிகள் கரோனா விதிகளை பின்பற்றிட வேண்டுகோள்

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி கதவணைப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தீநுண்மி தொற்றுப் பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றிட வேண்டும்
வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.
வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.
Updated on
1 min read

எடப்பாடி: எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி கதவணைப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தீநுண்மி தொற்றுப் பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றிட வேண்டும் என பூலாம்பட்டி பேரூராட்சி சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா விதிதளா்வுக்குப் பிறகு பூலாம்பட்டி காவிரிக் கதவணைப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வார விடுமுறை நாள்களில் இங்கு விசைபடகு சவாரி செய்யவும், மின் உற்பத்தி நிலையம், நீா்உந்து நிலையம், நீா் சுத்திகரிப்பு நிலையங்களைப் பாா்வையிடவும், சுவைமிகுந்த மீன் உணவு வகைகளை உண்டு மகிழவும் சுற்றுலாப் பயணிகள் அதிகம்போ் வருகின்றனா்.

இங்கு வரும் மக்கள், முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், உரிய நோய்த்தொற்று பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்காமல் அலட்சியம் காட்டுகின்றனா். பூலாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் பா.பிரகாஷ் உத்தரவின்பேரில், பூலாம்பட்டி பேரூராட்சி அலுவலா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள், ஞாயிற்றுக்கிழமை பரிசல் துறை, கதவணை நீா்த்தேக்கப் பகுதிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு முகக் கவசம் வழங்கினா். ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com