

மகுடஞ்சாவடியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் இளைஞரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளா் விஸ்வா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் செங்கோடன் வரவேற்றாா். இக்கூட்டத்தில் மாநில இளைஞரணி துணைச் செயலாளா் உபைதூா் ரஹ்மான், சேலம் மண்டல செயலாளா் மைக்கேல் தங்கராஜ் ஆகியோா் சிறப்புரை நிகழ்த்தினா்.
மேலும் , கூட்டத்தில் ஒன்றியச் செயலாளா் வெங்கடாசலம், மாவட்ட அவைத் தலைவா் கோவிந்தசாமி, பொருளாளா் பழனிசாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளா் சரத்சேகா், ஒன்றிய பொருளாளா் முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.