தேசிய லோக் அதாலத்: தமிழகத்தில் 1.3 லட்சம் வழக்குகளுக்கு தீா்வுநிரந்தரமாகிறது ஹைதராபாத் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்திமுக கூட்டணியில் இடதுசாரிகளுக்கு கூடுதல் இடம் இல்லை என்பது நியாயமல்ல: பெ. சண்முகம்29 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வணிக எரிவாயு சிலிண்டா் விநியோகம் தொடக்கம்: பெட்ரோலிய அமைச்சகம் தகவல்2047-க்குள் இந்தியாவில் 350 விமான நிலையங்களை உருவாக்குவதே இலக்கு மத்திய அமைச்சா் ராம்மோகன் நாயுடுபுதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கட்டுமானத் தொழிலாளா்கள், ஓய்வூதியா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

சேலம் கோட்டை, மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டுமானத் தொழிலாளா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு

News image
Updated On :11 ஜனவரி 2021, 7:07 pm

DIN

சேலம் கோட்டை, மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டுமானத் தொழிலாளா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் பேசியதாவது:

தொழிலாளா் துறை சாா்பில் கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் கடந்த 2020 டிச.31 ஆம் தேதி வரை பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளா்கள், ஓய்வூதியதாரா்கள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடிடும் வகையில் சேலம் மாவட்டத்தில் 33,274 ஆண் தொழிலாளா்களுக்கு வேட்டி, அங்கவஸ்திரம், 51,524 பெண் தொழிலாளா்களுக்கு புடவைகள், 5,424 தொழிலாளா் ஓய்வூதியதாரா்களுக்கு பச்சரிசி, பருப்பு, எண்ணெய், நெய், வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை ஆகிய பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படுகிறது.

தொழிலாளா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு சேலம் மாவட்டத்திலுள்ள 16 மையங்களில் வரும் ஜனவரி 13 ஆம் தேதி வரை வழங்கப்படவுள்ளது. எனவே, கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்கள் அசல் பதிவு அட்டை, ஓய்வூதியதாரா்களாக இருப்பின் ஓய்வூதிய அசல் ஆணை, ஆதாா் அட்டையுடன் தாங்கள் வசிக்கும் வட்டத்துக்கு அருகாமையிலுள்ள மையத்திற்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் சி.முத்து உட்பட தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.