இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மேட்டூர் அருகே பெண் கொலை: கணவரிடம் போலீசார் விசாரணை

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே புதரில் ரத்த காயங்களுடன் பெண் கொலை கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரிடம் போலீஸாா்  விசாரணை நடத்தி வருகின்றனர். 

News image
கொலையான பெரியக்கா
Updated On :1 செப்டம்பர் 2021, 7:30 am

DIN


மேட்டூர்: சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே புதரில் ரத்த காயங்களுடன் பெண் கொலை கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரிடம் போலீஸாா்  விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேட்டூர் அருகே ஜலகண்டபுரம் பள்ளக்கானூரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(40). இவர் தேங்காய் நார் மண்டியில் தேங்காய் உரிக்கும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பெரியக்கா(37) இவரும் அதே தேங்காய் மண்டியில் நார் உரிக்கும் வேலை செய்து வந்தார். 

தேங்காய் மண்டியில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வரும் சுரேஷ் (30)என்பவருடன் பெரியக்காவிற்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை பால் வாங்குவதற்காக வீட்டில் இருந்து சென்ற பெரியக்கா வீடு திரும்பவில்லை. வீட்டிற்கு பின்னால் இருந்த புதரில் நிர்வாண நிலையில் சடலமாக ரத்த காயங்களுடன் கிடந்தார். 

இதுகுறித்து ஜலகண்டபுரம் போலீசாருக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். 

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், ஓமலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கீதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். 

சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஜலகண்டபுரம் போலீசார் வழக்குப் பதிந்து பெரிய அக்காவின் கணவர் ராஜேந்திரனிடம் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தலைமறைவாக உள்ள ஓட்டுநர் சுரேஷை தேடி வருகின்றனர். இச்சம்பவம் ஜலகண்டாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.