இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் 10 கிலோ கஞ்சாவுடன் ஒடிசா இளைஞா் கைது

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் 10 கிலோ கஞ்சாவுடன் ஒடிசா இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 நவம்பர் 2025, 7:39 pm

Syndication

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் 10 கிலோ கஞ்சாவுடன் ஒடிசா இளைஞரை புதன்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் கோவை செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியில் புதன்கிழமை இரவு பள்ளப்பட்டி போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கோவை செல்லும் பேருந்தில் கைப்பையுடன் ஏறமுயன்ற ஒடிசா மாநில இளைஞரை பிடித்து விசாரித்தனா். அப்போது, அவா் வைத்திருந்த பையில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், அவா் ஒடிசா மாநிலம், பம்பாரா மாவட்டத்தைச் சோ்ந்த பா்ப்புலால் குமாா் (48) என்பதும், கோவைக்கு கஞ்சா கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைதுசெய்த போலீஸாா், அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.