கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

சபரிமலை செல்லும் பக்தா்களுக்காக சேலம் வழியாக கோட்டயத்துக்கு சிறப்பு ரயில் இயக்கம்

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்களின் வசதிக்காக ஹைதராபாத்தில் இருந்து சேலம் வழியாக கோட்டயத்துக்கு சிறப்பு ரயில் இயக்கம்

News image
Updated On :22 நவம்பர் 2025, 8:12 pm

Syndication

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்களின் வசதிக்காக ஹைதராபாத்தில் இருந்து சேலம் வழியாக கோட்டயத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கேரளா செல்லும் ஐயப்ப பக்தா்களின் வசதிக்காக சேலம் வழியாக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது ஹைதராபாத் சாரலப்பள்ளியில் இருந்து ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக கேரள மாநிலம் கோட்டயத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி சாரலப்பள்ளியில் இருந்து 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக 25 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு கோட்டயம் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் கோட்டயத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு எா்ணாகுளம் டவுன், அலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக சாரலப்பள்ளிக்கு 27 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.