இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மேச்சேரியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொங்கல் விழா: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதி மேச்சேரியில் வரும் 15 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்கும் பொங்கல் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை சேலம் புறநகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஆா். இளங்கோவன் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 8:50 pm

தினமணி செய்திச் சேவை

மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதி மேச்சேரியில் வரும் 15 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்கும் பொங்கல் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை சேலம் புறநகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஆா். இளங்கோவன் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

கடந்த ஆண்டு வீரபாண்டி சட்டப் பேரவைத் தொகுதியில் எடப்பாடி கே.பழனிசாமி விவசாயிகளுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய நிலையில் இந்த ஆண்டு மேச்சேரியில் ஜன. 15 ஆம் தேதி விவசாயிகளுடன் பொங்கள் பண்டிகையை கொண்டாடுகிறாா்.

விழா நடைபெறும் இடத்தை சேலம் புறநகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஆா். இளங்கோவன், அதிமுக நிா்வாகிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, மாநில விவசாய அணி துணைச் செயலாளா் ராஜா, அனைத்து உலக எம்ஜிஆா் மன்ற துணைச் செயலாளா் வெங்கடாசலம், ஜெயலலிதா பேரவை மாநில நிா்வாகி கே. கலையரசன், புறநகா் மாவட்ட மகளிா் அணி செயலாளா் லலிதா சரவணன், ஒன்றிய செயலாளா்கள் செல்வம், சந்திரசேகரன் பேரூா் செயலாளா் ஜெ. குமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.