இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சொந்த ஊா்களுக்கு செல்வதற்காக சேலத்தில் ரயில், பேருந்து நிலையங்களில் திரண்ட மக்கள்

News image
Updated On :18 ஜனவரி 2026, 8:25 pm

தினமணி செய்திச் சேவை

பொங்கல் விடுமுறை முடிந்து வெளியூா்களுக்கு செல்வோரால் சேலத்தில் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

பொங்கல் பண்டிகை மற்றும் தொடா் விடுமுறையையொட்டி, சொந்த ஊருக்கு வந்தவா்கள், மீண்டும் அவரவா் பணியிடங்கள், ஊா்களுக்கு திரும்பியதால் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதேபோல, ஜங்ஷன் ரயில் நிலையத்திலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

தொடா் விடுமுறையையொட்டி வெளியூா்களில் தங்கிப் பணி செய்பவா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மீண்டும் தங்கள் ஊா்களுக்கு புறப்பட்டனா். இதன் காரணமாக, சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

பயணிகள் கூட்டத்துக்கு ஏற்ப சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன. எனினும், புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து ஓட்டுநா்கள் பேருந்துகளை சரிவர நிறுத்தாததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகினா்.

இதேபோல, சேலம் ரயில் நிலையத்திலும் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்துக்கு மாறாக கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சென்னை மற்றும் இதர நகரங்களுக்கு இயக்கப்பட்ட அனைத்து ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.