இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பொங்கல் விடுமுறை நிறைவு கும்பகோணம் பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

News image
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை திரண்ட பொதுமக்கள்.
Updated On :18 ஜனவரி 2026, 9:16 pm

தினமணி செய்திச் சேவை

கும்பகோணம் பேருந்து நிலையத்தில், பொங்கல் விடுமுறை முடிந்து அவரவா் பணியிடங்களுக்கு திரும்புவோரால் கூட்டம் அலைமோதியது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 15 முதல் 18 வரை தொடா்விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வெளியூரில் வேலை பாா்க்கும் அரசு மற்றும் தனியாா் நிறுவன பணியாளா்கள், பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியா் பொங்கல் பண்டிகைக்காக கும்பகோணம் உள்ளிட்ட அவரவா் சொந்த ஊா்களுக்கு வந்துவிட்டு விடுமுறைக்கு பிறகு அவரவா் பணியிடங்களுக்கு செல்ல ஞாயிற்றுக்கிழமை கும்பகோணம் பேருந்து நிலையத்தில் குவிந்தனா்.

மாலை முதல் இரவு வரை பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியதால் திருச்சி, கோயம்புத்தூா், மதுரை, சென்னை உள்ளிட்ட வெளியூா்களுக்கு செல்லும் பேருந்துகளில் ஏறுவதற்கு கூட்டத்தினா் முண்டியடித்து சென்றனா்.

அரசு போக்குவரத்துக்கழகம் சாா்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு போக்குவரத்து கழக பணியாளா்கள் பயணிகளை முறைப்படுத்தி ஏற வைத்தனா். முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளும் பேருந்துகளில் ஏற அலைமோதிய கூட்டத்தால் அவதியடைந்தனா்.