/
சேலத்தில் கணவருக்கு தங்க மாலை அணிவித்த விவகாரத்தில் பெண் காவலருக்கு குறிப்பாணை (மெமோ) வழங்கி உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம் மாவட்ட குற்றப் பிரிவில் பணிபுரிந்து வரும் பெண் காவலா், கடந்த 1 ஆம் தேதி தனது கணவா் பெருமாளின் (40) பிறந்த நாள் விழாவில் 15 பவுன் தங்க செயினை கணவருக்கு மாலையாக அணிவித்தாா். இந்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுதொடா்பாக விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, பெண் காவலருக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவரது கணவருக்கு அணிவித்த தங்க மாலையின் எடை எவ்வளவு, எங்கு வாங்கப்பட்டது என்பது குறித்து உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
திருச்சியில் திருமண வீட்டில் 22 பவுன் தங்க நகைகள் திருட்டு
பூட்டியிருந்த வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு
ஒரே நாளில் இரு வீடுகளில் 32 பவுன் நகைகள் திருட்டு
பேருந்தில் பெண்ணிடம் 3 பவுன் தங்க நகை திருட்டு
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



