தமிழக சட்ட மேலவைத் தேர்தல் நடத்துவதற்காக, பட்டதாரிகள் பிரிவு மற்றும் ஆசிரியர்கள் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்களும் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன. மதுரையில் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் தொகுதியில் வாக்காளர்களைச் சேர்ப்பதற்காக தெற்கு, வடக்கு, மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி தாலுகா அலுவலகங்களிலும், மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இம்முகாமில் பட்டதாரி பிரிவைவிட ஆசிரியர்கள் தொகுதியில் குறைவான அளவே விண்ணப்பங்கள் வந்துள்ளன.