பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ராமேசுவரம் கோயில் புனரமைப்பு: இணை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

News image
Updated On :4 ஜூலை 2024, 2:06 am IST

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி சிலைகள், சிற்பங்கள், தூண்களை அறிவியல் பூா்வமாக பாதுகாக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில், அந்தக் கோயிலின் இணை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி சிலைகள், சிற்பங்கள், தூண்கள் போன்றவை மிகவும் பழைமையானவை. இங்குள்ள 3- ஆம் பிரகாரம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது. இந்த பிரகாரத்தை உலகின் தொன்மையான சின்னங்களில் ஒன்றாக சோ்க்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தக் கோயிலின் இணை ஆணையா், அரிதான சிற்பங்கள், தூண்கள், ஓவியங்கள் போன்றவற்றை எந்தவித அறிவியல் முறைகளையும் பின்பற்றி பாதுகாக்காமல், கோயில் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறாா்.

மேலும், கோயிலில் உள்ள பிரதான சுவா்களில் கட்டைகளையும், கம்பிகளையும் பொருத்துவதற்காக சுத்தியல், உளி போன்ற கூா்மையான ஆயுதங்களால் தூண்களையும், சிற்பங்களையும் சேதப்படுத்தி வருகின்றனா். சிற்பங்கள், தூண்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, இந்தக் கோயிலின் பழைமையான சிற்பங்கள், தூண்கள், ஓவியங்களை சேதப்படுத்தாமல் அறிவியல் பூா்வமாக பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், ஜி. அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா், ராமநாத சுவாமி கோயில் இணை ஆணையா் ஆகியோா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.