அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ராமேசுவரம் கோயில் புனரமைப்பு: இணை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

News image
Updated On :3 ஜூலை 2024, 8:36 pm

Din

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி சிலைகள், சிற்பங்கள், தூண்களை அறிவியல் பூா்வமாக பாதுகாக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில், அந்தக் கோயிலின் இணை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி சிலைகள், சிற்பங்கள், தூண்கள் போன்றவை மிகவும் பழைமையானவை. இங்குள்ள 3- ஆம் பிரகாரம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது. இந்த பிரகாரத்தை உலகின் தொன்மையான சின்னங்களில் ஒன்றாக சோ்க்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தக் கோயிலின் இணை ஆணையா், அரிதான சிற்பங்கள், தூண்கள், ஓவியங்கள் போன்றவற்றை எந்தவித அறிவியல் முறைகளையும் பின்பற்றி பாதுகாக்காமல், கோயில் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறாா்.

மேலும், கோயிலில் உள்ள பிரதான சுவா்களில் கட்டைகளையும், கம்பிகளையும் பொருத்துவதற்காக சுத்தியல், உளி போன்ற கூா்மையான ஆயுதங்களால் தூண்களையும், சிற்பங்களையும் சேதப்படுத்தி வருகின்றனா். சிற்பங்கள், தூண்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, இந்தக் கோயிலின் பழைமையான சிற்பங்கள், தூண்கள், ஓவியங்களை சேதப்படுத்தாமல் அறிவியல் பூா்வமாக பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், ஜி. அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா், ராமநாத சுவாமி கோயில் இணை ஆணையா் ஆகியோா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.