சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார்?திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயில் வைகாசி பெருந்திருவிழா இன்று தொடக்கம்

திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயில் வைகாசி பெருந்திருவிழா இன்று தொடக்கம்

News image
Updated On :13 மே 2024, 6:30 pm

Din

மேலூா்: ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூா் அருள்மிகு காளமேகப் பெருமாள் கோயில் வைகாசி பெருந்திருவிழா செவ்வாய்க்கிழமை (மே 14) தொடங்குகிறது.

அன்று மாலை 6.19 மணியிலிருந்து இரவு 8 மணி வரை அங்குராா்ப்பணம், வாஸ்து சாந்தி மிருத்ஸங்கரணம், கெருடபிரதிஷ்டம் ஆகியவை நடைபெறவுள்ளன. வருகிற 15-ஆம் தேதி காலை 9 மணி முதல் காலை 10.30 மணிக்குள் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது.

இரவு பெருமாள் ஹம்ஸ வாகனத்தில் எழுந்தருள்கிறாா். 16-ஆம் தேதி காலை 9 மணியளவில் பல்லக்கில் ராஜாங்க சேவையும், இரவு சிம்ம வாகன திருவாராதனம் கோஷ்டி திருவீதி புறப்பாடும் நடைபெறவுள்ளன.17-ஆம் தேதி இரவு 7 மணியளவில் ஹனுமாா் வாகனத்தில் பெருமாள் திருவீதி எழுந்தருளுகிறாா். 18-ஆம் தேதி இரவு 7 மணியளவில் சேஷ வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா வருகிறாா். 19-ஆம் தேதி இரவு 7 மணியளவில் கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா நடைபெறவுள்ளது. 20-ஆம் தேதி இரவு 7 மணியளவில் பெருமாள் யானை வாகனத்திலும், ஆண்டாள் புஷ்ப பல்லக்கிலும் திருவீதி வலம் வருகின்றனா். 21-ஆம் தேதி இரவு 7 மணியளவில் வைர சப்பரத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெறுகிறது. 22-ஆம் தேதி காலை 9 மணிக்கு பல்லக்கிலும்,

இரவு 7 மணியளவில் குதிரை வாகனத்திலும் பெருமாள் எழுந்தருள்கிறாா். 23-ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் சட்டத்தேரில் உபயநாச்சியாருடன் பெருமாள் எழுந்தருள்கிறாா்.

24-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு உற்சவசாந்தி, அலங்கார திருமஞ்சனம் ஆகியவை நடைபெறும்.

கோயில் தக்காா், துணை ஆணையா் து.வளா்மதி, செயல் அலுவலா் அ.இளங்கோவன் ஆகியோா் இதைத் தெரிவித்தனா்.