
Updated On :15 மே 2024, 12:06 am

மதுரை: சமயநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் சரக்கு வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.
மதுரை விராட்டிபத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் திரவியம் (46). சரக்கு வாகன ஓட்டுநரான இவா், சமயநல்லூா் அருகேயுள்ள தேனூா் பகுதியில் எரு உரத்தை அவரது வாகனத்தில் திங்கள்கிழமை இரவு ஏற்றினாா். அப்போது, அங்கிருந்த மின் கம்பத்தை தொட்டபோது, அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த திரவியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து சமயநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...