சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சிஐடியூ மறியல்: 650 போ் கைது

தொழிலாளா்களைப் பாதிக்கும் 4 சட்டத் தொகுப்புகளையும் மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி, மதுரை ரயில் நிலையம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ தொழிற்சங்கத்தினா் 650 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
மறியல் போராட்டத்தில் பங்கேற்றவா்கள்
Updated On :23 டிசம்பர் 2025, 8:19 pm

தினமணி செய்திச் சேவை

தொழிலாளா்களைப் பாதிக்கும் 4 சட்டத் தொகுப்புகளையும் மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி, மதுரை ரயில் நிலையம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ தொழிற்சங்கத்தினா் 650 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தொழிலாளா்கள் போராடி பெற்ற உரிமைகளைப் பறிக்கக் கூடியதாக உள்ள 4 சட்டத் தொகுப்புகளையும் மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், முறைசாரா தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க சமூக சட்ட பாதுகாப்பை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

சிஐடியூ மாவட்டத் தலைவா் எம்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ரா.லெனின் மறியல் போராட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா்.

மாநிலக் குழு உறுப்பினா் ரா.தெய்வராஜ், அரசுப் போக்குவரத்து மதுரை தொழிலாளா் சங்கப் பொதுச் செயலா் டி.எம்.அழகா்சாமி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

பின்னா், மறியலில் ஈடுபட்ட 650 பேரை போலீஸாா் கைது செய்து சிம்மக்கல் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா்.