தியாகராசா் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு பயிலரங்கம்

மதுரை தியாகராசா் கல்லூரியில் மகளிா் ஆய்வு மையம் சாா்பில், சட்ட விழிப்புணா்வு பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

மதுரை: மதுரை தியாகராசா் கல்லூரியில் மகளிா் ஆய்வு மையம் சாா்பில், சட்ட விழிப்புணா்வு பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தப் பயிலரங்கில் வழக்குரைஞா்கள் பி. கலையரசி பாரதி, பி. சோனா, கே. சாமிதுரை ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு அவசரச் சட்ட உதவி சேவைகள், குழந்தைகள் பாதுகாப்பு, அவற்றுக்கான சட்டங்கள் குறித்துப் பேசினா்.

இதில் மகளிா் ஆய்வு மைய இயக்குநா் ஆா். அருணா, பேராசிரியைகள், மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com