மதுரை அருகே மாடு முட்டி காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள வாஞ்சிநகரத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் கணேசன்(65). விவசாயியான இவா், காளை மாடு வளா்ந்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 20 ஆம் தேதி வீட்டில் கட்டியிருந்த மாட்டை அவிழ்த்துள்ளாா். அப்போது, மாடு கணேசனை குத்தியது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்ட அவரது உறவினா்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கணேசன் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

தீ விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

மாடு முட்டியதில் சிறுவன் உயிரிழப்பு
விடியோக்கள்
கண்ணதாசன் கவிஞரான கதை| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -2


