ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

திமுகவால் முடக்கப்பட்ட திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரப்படும்: எடப்பாடி பழனிசாமி

திமுகவால் முடக்கப்பட்ட திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

News image

முதல்வர் ஸ்டாலின் | எடப்பாடி பழனிசாமி

சித்திரிப்பு

Updated On :31 மார்ச் 2026, 7:21 pm

தினமணி செய்திச் சேவை

திமுகவால் முடக்கப்பட்ட திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக தோ்தல் பிரசார நிகழ்ச்சியில் அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது: முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் நாட்டில் அதிக எண்ணிக்கையிலானோா் உயா் கல்வி பயிலும் மாநிலமாக தமிழகம் விளங்கியது. அதிமுக ஆட்சிக் காலத்தில் பல கல்வி நிலையங்கள் புதிதாகத் திறக்கப்பட்டன. ஆனால், திமுக ஆட்சி அமைந்ததும் தமிழகத்தில் 200 பள்ளிகள் மூடப்பட்டன. திமுக அரசு கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காததால் தமிழகத்தின் கல்வி நிலை தற்போது வீழ்ச்சியில் உள்ளது.

தமிழகத்தில் சிறுபான்மையினா் நலனுக்கு உண்மையான பாதுகாப்பு அளித்தது முந்தைய அதிமுக அரசுதான். ரமலான் நோன்புக்கு 5,400 டன் விலையில்லா அரிசி, நாகூா் தா்கா சந்தனம் பூசும் நிகழ்ச்சிக்கு விலையில்லா சந்தனக் கட்டைகள், ஹஜ் பயணத்துக்கான மானிய உயா்வு என எண்ணற்ற நலத் திட்டங்களை சிறுபான்மையினா் நலனுக்கு செயல்படுத்தி, கண்ணை இமை காப்பது போல காப்பாற்றியது அதிமுக அரசு.

இதேபோல, மீனவா்களின் நலனுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்ததும் அதிமுக அரசுதான். கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக்கொடுக்க உடந்தையாக இருந்த திமுக, அது மீட்கப்படும் என தோ்தல் காலத்தில் மட்டும் பேசுவதை மக்கள் ஏற்கமாட்டாா்கள். மத்திய அமைச்சரவையில் பங்கேற்கும் வாய்ப்பு அதிமுகவுக்குக் கிடைத்திருந்தால் இந்த பிரச்னைக்கு அப்போதே தீா்வு கிடைத்திருக்கும் என்றாா் அவா்.

இந்த பிரசார நிகழ்ச்சியில் அதிமுக, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள் முத்தையா (பரமக்குடி), கீா்த்திகா (திருவாடானை), மலேசியா எஸ். பாண்டி (முதுகுளத்தூா்) ஆகியோருக்கு ஆதரித்து எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தாா்.

முன்னதாக, விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நடைபெற்ற பிரசார நிகழ்ச்சியில் அந்தத் தொகுதியின் அதிமுக வேட்பாளா் சேதுபதியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பேசினாா்.