விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழனி அருகே தோட்டத்துக்குள் புகுந்த காட்டுமாடு: விவசாயிகள் அச்சம்

மூலக்கடை பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் பகலிலேயே காட்டுமாடு நடமாடியதால் விவசாயிகள் அச்சமடைந்தனா்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 8:40 pm

Din

பழனியை அடுத்த கோம்பைப்பட்டி மூலக்கடை பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் பகலிலேயே காட்டுமாடு நடமாடியதால் விவசாயிகள் அச்சமடைந்தனா்.

இந்த கிராமம் மலை அடிவாரத்தில் உள்ளது. இங்கு அகழிகள் தூா்ந்து போய் விட்டதால் காட்டுயானைகள், காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. இந்தப் பகுதியில் விவசாய நிலத்துக்குச் சென்ற விவசாயிகள் பலா் யானை தாக்கி மரணம் அடைந்தும், காட்டு மாடு தாக்கி பலத்த காயம் அடைந்தும் உள்ளனா். இதற்காக விவசாயிகள் போராட்டமும் நடத்தினா்.

இதையடுத்து வனத்துறையினா் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்து வருகின்றனா். இந்த நிலையில், சனிக்கிழமை பகலிலேயே தனியாா் தோட்டத்தில் காட்டு மாடு ஒன்று உலா வந்தது. விவசாயிகள் நாயின் துணையுடன் அதை விரட்டியடித்தனா்.

எனவே, வனத்துறையினா் வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.