
கொடைக்கானல் அருகேயுள்ள பள்ளங்கி பகுதியில் கஞ்சா விற்று போலீஸாரால் கைது செய்யப்பட்ட பேச்சியம்மாள்
Updated On :24 ஜூன் 2024, 5:47 pm

கொடைக்கானல்: கொடைக்கானலில் கஞ்சா விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பள்ளங்கி கிராமத்தில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீஸாா், பள்ளங்கி ஆற்றுப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த பெண்ணைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில் அவா் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்த பேசச்சியம்மாள் (56) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ஒரு கிலோ 100-கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அவா் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...