பிறகு மூலஸ்தானத்தில் உள்ள விநாயகா், மூலவா், உற்சவா், வள்ளி, தெய்வானை சமேதா் சண்முகா் ஆகியோருக்கும், பாரவேல் மண்டபத்தில் உள்ள துவாரபாலகா், கொடிக்கம்பம், மயில் வாகனத்துக்கும் காப்புக் கட்டப்பட்டது. பிறகு நவவீரா்கள், பரிவார மூா்த்திகளுக்கும் காப்புக் கட்டப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மலைக் கோயில் போகா் சந்நிதியில் பழனி போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிக்கு கோயில் சாா்பில் மரியாதை செய்யப்பட்டது. பின்னா் புவனேஸ்வரி அம்மன் புறப்பாடாகி அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்துக்கு எழுந்தருளினாா். மலைக் கோயிலில் வருகிற 11-ஆம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையும், மறுநாள் 12-ஆம் தேதி விஜயதசமி அன்று அம்புவில் போடுதலும் நடைபெறுகின்றன.