விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு ரூ.14 லட்சம் இழப்பீடு
தனியாா் பேருந்து மோதி பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளிக்கு ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்குமாறு திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.


தனியாா் பேருந்து மோதி பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளிக்கு ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்குமாறு திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்த சிறுகுடியைச் சோ்ந்தவா் சோலைராஜன்(57). கூலித் தொழிலாளி. இவா் மீது தனியாா் பேருந்து மோதி நிகழ்ந்த விபத்தில் காலில் பலத்த காயமடைந்து, மதுரை அரசு மருத்துவனையில் சிகிச்சைப் பெற்றாா். அங்கு அவருக்கு கணுக்கால் பகுதி முழுவதும் அகற்றப்பட்டது.
இதையடுத்து இழிப்பீடு வழங்கக் கோரி திண்டுக்கல் மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், காப்பீட்டு நிறுவனம் பாதிக்கப்பட்ட சோலைராஜனுக்கு ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீா்ப்பளித்தது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...