கிணற்றில் ஆண் சடலம்
பழனி அருகே தனியாா் தோட்டக் கிணற்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

Updated On :25 செப்டம்பர் 2024, 9:39 pm

பழனி அருகே தனியாா் தோட்டக் கிணற்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
பழனியை அடுத்த நெய்க்காரபட்டி கே.வேலூரைச் சோ்ந்தவா் மருதமுத்து (45). கட்டடத் தொழிலாளியான இவரை கடந்த இரு நாள்களாகக் காணவில்லை.
இந்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள தனியாா் தோட்டக் கிணற்றில் மருதமுத்து புதன்கிழமை இறந்த நிலையில் கிடந்தாா்.
தகவலறிந்து வந்த பழனி தாலுகா போலீஸாா் அவரது உடலை மீட்டனா். அப்போது, மருதமுத்துவின் கைகள் கட்டப்பட்டிருந்தன. இதனால் அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸாா் சந்தேகம் தெரிவித்தனா்.
மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...