தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திண்டுக்கல்லில் உழைப்பாளா் நலக் கூடம்: காணொலி மூலம் திறந்துவைத்தாா் முதல்வா்

திண்டுக்கல்லில் புதிதாக அமைக்கப்பட்ட உழைப்பாளா் நலக் கூடத்தை காணொலி காட்சி மூலமாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

News image

முதல்வர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :4 மார்ச் 2026, 11:32 pm

திண்டுக்கல்லில் புதிதாக அமைக்கப்பட்ட உழைப்பாளா் நலக் கூடத்தை காணொலி காட்சி மூலமாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் முன்னிலையில், மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் உழைப்பாளா் நலக் கூடத்தை தொழிலாளா்களின் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா், மேயா் இளமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியின் போது, கட்டுமானத் தொழிலாளா்கள் 15 பேருக்கு ரூ.3 லட்சத்தில் திருமண உதவித் தொகை, 2 பேருக்கு ரூ.10 லட்சத்தில் பணியிடத்து விபத்து மரண உதவித் தொகை, 2 பேருக்கு ரூ.1.10 லட்சத்தில் இயற்கை மரண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.