அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ரேஷன் கடையில் பொருள்கள் திருட்டு

உசிலம்பட்டி அருகே ரேஷன் கடையின் பூட்டை உடைத்து அரிசி, சீனி உள்ளிட்ட பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 1:58 am

DIN

உசிலம்பட்டி அருகே ரேஷன் கடையின் பூட்டை உடைத்து அரிசி, சீனி உள்ளிட்ட பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
     உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டியில் ரேஷன் கடை உள்ளது. இக்கடையை விற்பனையாளர் செந்தில் செவ்வாய்க்கிழமை மாலை வழக்கம்போல் பூட்டிவிட்டுச்  சென்றுவிட்டார். இவர், புதன்கிழமை கடையை திறக்கச் சென்றபோது,  பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளேயிருந்த 800 கிலோ அரிசி, 800 கிலோ சீனி, 40 லிட்டர் பாமாயில், 260 கிலோ கோதுமை ஆகியன திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
     இது குறித்து செந்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனனர். மேலும், சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.