சரக்கு வாகன ஓட்டுநரிடம்நகை, பணம் பறிப்பு
மதுரை அருகே சரக்கு வாகன ஓட்டுநரிடம் நகை, பணம் பறித்துச் சென்ற சம்பவம் குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.


மதுரை: மதுரை அருகே சரக்கு வாகன ஓட்டுநரிடம் நகை, பணம் பறித்துச் சென்ற சம்பவம் குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவா் மாா்டின் ஸ்டாலின் (37). சரக்கு வாகன ஓட்டுநரான இவா், சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சரக்கு வாகனகத்தை ஓட்டி வந்துள்ளாா். மதுரை மாவட்டம் மலையாளத்தான்பட்டியில் வாகனம் திடீரென பழுதாகி நின்றுவிட்டதால், அதை அவா் சரிசெய்து கொண்டிருந்துள்ளாா். அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 3 போ், மாா்டின் ஸ்டாலினை மிரட்டி, அவா் அணிந்திருந்த தங்க மோதிரம், ரூ.7 ஆயிரம், செல்லிடப்பேசி, வாகனத்தின் ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகம், ஏ.டி.எம். அட்டை உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றுவிட்டனராம்.
இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...