பெரியாா் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் மாா்ச் 15-க்குள் முடிக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்
மதுரை பெரியாா் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் வரும் மாா்ச் 15 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.










